பக்கங்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழே போற்றி..!


கந்தன் நகையினிற் பிறந்து
காலவே கத்தினில் வளர்ந்து
சந்தம் ஆயிரம் புனைந்து
சாவினைத் தூக்கியே எறிந்து
அந்தம் ஆதியும் அற்றே
அலைகடல் போலுரு வெடுத்துத்
தந்தத் தூய்நிற மாகித்
தரணியை ஆண்டிடுந் தாயே!
"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக