பக்கங்கள்

திங்கள், 1 மார்ச், 2010

கேள்..!! மனமே..!! கேள்..!!


சந்திக்குஞ் சமயத்திற் சிந்திக்க மறந்துஅஞ்சி
நிந்திக்கும் அறிவை நித்தங் கேளாமல்-மட நெஞ்சே
பந்திக்கு முந்திப் புகுவதுபோல் பாய்ந்துசென்று
வந்தவளைத் தேடாதே கேள்..!!

அந்திக்குத் தத்தித்தத் தித்தாவும் பறவைபோல்
மந்திக்கு மறுவடிவாய்க் கிளைதாவும் மனமே நில்..!!
சிந்திக்க மறந்துசில் வண்டாகிரீங் கரித்து
தந்தியனுப் பிடாதே கேள்..!!

உந்தியுந் தியேயுற வாடிடத் தள்ளினும்..
தொந்திநி றைந்துவிட்டால றுசுவையு மறியாது..
ஐந்திரண்டு திங்களிற் றத்தனையுங் கசக்குமே..
இந்திரிய மடக்கிவாழ் கேள்..!!

"

பேயாயுழலுஞ் சிறுமனமே என்ற கருத்தினால் எம்
கருத்தில் உதித்த‌ பாடலிது..!!
மனம் ஒரு மரம்விட்டு மரம் தாவும் குரங்கு ..!!
அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவனே மனிதனாகவும்,
பின்னாளில் மகானாகவும் ஆகிறான்..!!
நன்றி..!!!


அன்பன்.,
க.அண்ணாமலை.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக