பக்கங்கள்

வெள்ளி, 28 மே, 2010

வேண்டாம் மதுவாம்..!

-
கனவில் வந்திடும் மதுவினைக் கொஞ்சம்
....கலந்து இன்புறக் களித்திட நாளும்
மனனம் செய்திடும் மனதினை ஒருநாள்
....மறந்து மண்ணினில் வாழ்ந்திடும் வரத்தை
நினைந்து உன்னைநான் நித்தமும் கேட்பேன்
....நிகழ்த்து அற்புதம் நிறுத்திடு இதனை
புனைந்து வைப்பவர் யாரென அறியேன்
....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!

தொலைக்க சென்றிடும் துயரெலாம் பறக்கும்
....தொகையும் நன்றென வீட்டினை அடையும்
அலைக்க ழித்திடும் விதியினைக் கடந்து
....அளவில் லாதொரு இன்பமும் சேரும்
கலைக்க வேண்டுமே மதுவெனும் பேயை
....குடும்பம் இன்முகம் அழகுறக் காணும்
நிலைத்து நின்றிடும் நம்திரு யாவும்
....நீரை நீக்கிட முனைந்திடும் பொழுதே!

-