பக்கங்கள்

சனி, 3 ஜூலை, 2010

சாகாத வரம்வேண்ட!

*
சாகாத வரம்வேண்ட சமுத்திரமாய்ப் புகழ்வேண்ட
ஆகாவென் றனைவருமே அருமையென வாழ்த்திடவே
போகாத ஒருவாழ்க்கை பொருளோடு வேண்டுமெனில்
ஆகாத செயல்துடைத்து அருஞ்செயல்கள் புரிந்திடுவீர்!

பொன்னும்நல் மணியெதுவும் போகுமிடம் தெரியாது
சொன்னவைகள் யாவுமுந்தன் சொல்படியே நடக்காது
பண்ணதுவே அவனையெண்ணி பாடிக்கொண் டிருந்தாலே
எண்ணமது ஓர்நாளில் ஈடேறும் இதுதிண்ணம்!

செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்
அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்
அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!

நன்றிகள்!


*இப்பா கலிமண்டிலம் வகையைச் சார்ந்தது.

6 கருத்துகள்:

தோழி சொன்னது…

// அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!//

சிறப்பான வரிகள்.. தொடர்ந்து எழுதுங்க...

ஜோதிஜி சொன்னது…

ஊரில் இருந்து மற்றொரு ஞாயிறு. நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள்.

அண்ணாமலை..!! சொன்னது…

@ தோழி,

மிக்க நன்றிகள் தோழி!


@ ஜோதிஜி

மிக்க நன்றிகள் ஜோதிஜி!

vasan சொன்னது…

எப்ப‌டி, இந்த வயசுல‌ இப்படி
பெரிய‌ நினைப்ப‌ல்லாம்.வாங்க‌,
இந்த‌மாதிரி ஆட்க‌ளைத் தானே
தேடித்திரிந்தார், முப்பத்தைந்தில்
முக்தியான‌ விவேக‌ன‌ந்த‌ர்.
விழிப்புறுவோம்.

Unknown சொன்னது…

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

அண்ணாமலை..!! சொன்னது…

@ vasan,
தங்களைப் போன்றவர்களின் ஆசிகள் தான் காரணம்!
ரொம்ப நன்றிகள்!

@ sweatha,
ரொம்ப நன்றிகள்

கருத்துரையிடுக